For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையின் தொடர் அட்டகாசம்.. 7 காரைக்கால் மீனவர்கள் சிறை பிடிப்பு

Google Oneindia Tamil News

காரைக்கால்: இலங்கையின் அட்டகாசம் மீண்டும் தொடர்கதையாகியுள்ளது. தட்டிக் கேட்க முடியாத அளவுக்கு இலங்கை கடற்படையினர் அடுத்தடுத்து தமிழக மீனவர்களைப் பிடித்து வந்த நிலையில் தற்போது புதுச்சேரி மாவட்டம் காரைக்காலைச் சேர்ந்த 7 பேரை சிறை பிடித்துள்ளனர்.

சமீபத்தில்தான் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று சிறையில் அடைத்தனர் என்பது நினைவிருக்கலாம். அவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.

Lankan navy captures 7 Karaikal fishermen

மேலும் கச்சத்தீவு அருகே நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களையும் இலங்கைப் படையினர் விரட்டியடித்தனர். இந்த நிலையில் காரைக்காலைச் சேர்ந்த 7 மீனவர்களை பிடித்துச் சென்றுள்ளனர்.

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து காசாகுடி மேடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் காரை நகர் அருகே மீன்பிடித்து கொண்டு இருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர் 7 பேரையும் மற்றும் அவர்களது விசைப்படகுகளுடன் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

இவர்களையும் சிறையில் அடைக்க இலங்கைக் கடற்படையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
Lankan navy have captured 7 fishermen from Karaikal and taken for imprisonment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X