ஜெ. இறுதிச் சடங்கு.. எங்கெங்கும் சோகம்.. விடைபெற்றார் "புரட்சித் தலைவி"!
மறைந்த ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற ராகுல் காந்தியும் திருநாவுக்கரசரும் சிரித்து பேசிக் கொண்டனர்.
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் சரியாக 4.30 மணியளவில் ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு மெரினா கடற்கரை நோக்கி ஊர்வலமாகச் சென்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஊர்வலத்தின் முக்கிய துளிகள் இதோ...
• ஜெயலலிதாவின் ஊர்வலத்தை பின் தொடர்ந்தது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் கார்
• அமைச்சர் பெருமக்கள் வெள்ளை உடையில் வரிசையாக முன் வரிசையில் அணி வகுந்து சென்றனர்
• எம்பிக்கள், அதிமுக எம்பிக்கள் ஊர்வலத்தில் நடந்து சென்றனர்
• அமைச்சர்களை தொடர்ந்து போலிசார் அணி வகுப்பு
• அதன் பின் தொடர்கிறது மறைந்த ஜெயலலிதாவின் உடலைத் தாங்கிய ராணுவ வாகனம்
• பறக்கும் ரயில்வே மேம்பாலத்தில் நின்று பொதுமக்கள் அஞ்சலி
• மெரினா கடற்கரை சாலையில் உள்ள அரசு அலுவலகங்கள் மீது பொதுமக்கள் ஏறி நின்று அஞ்சலி
• முப்படை வீரர்களின் அணி வகுப்பு சூழ ஜெயலலிதாவின் இறுதிப் பயணம் சென்றது
• முக்கியமான தருணங்களில் ஜெயலலிதா கூடவே இருந்தவர் உயிர் தோழி சசிகலா ராணுவ வாகனத்தில் சோகத்தோடு அமர்ந்து பயணம்
• ஜெயலலிதா ஆட்சியில் இருந்து நெருக்கடியின் காரணமாக பதவி விலகும் போதெல்லாம் முதல்வர் பதவி ஏற்று ஜெயலலிதாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய ஓ. பன்னீர் செல்வம் ராணுவ வாகனத்தில் பயணம்
• உத்தரபிரதேச மாநிலத் தலைவர் அகிலேஷ் யாதவ் ராணுவ வாகனத்தில் அமர்ந்து பயணம்
• கண்ணீர் மல்க லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
• சாலையின் இருமருங்கிலும் பொதுமக்கள் கதறி கண்ணீர் விட்டு அஞ்சலி
• வழி எங்கும் மலர் தூவி பொதுமக்கள் அஞ்சலி
• சேப்பாக்கம் சிதம்பரம் விளையாட்டு மைதானத்தின் மேல் நின்று பொதுமக்கள் அஞ்சலி
• அதிமுக கொடி ஏந்தி தொண்டர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்
• ராஜாஜி ஹால் முதல் மெரினா வரை மக்கள் கூட்டம் வரிசையாய் நின்று அஞ்சலி
• இரண்டு விரல்களை உயர்த்தி ஜெயலலிதா காட்டுவது போல் அதிமுக தொண்டர் இரு விரல்களை காட்டி ஊர்வலத்தில் நடந்து சென்றனர்
• ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கை பொதுமக்கள் பார்க்க வசதியாக மெரினா கடற்கரையில் எல்சிடி திரைகள் பொருத்தப்பட்டன.
• ஒரு சிறிய அசம்பாவிதமும் இன்றி ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் முடிந்தது
• வழி நெடுகிலும் குவிந்திருந்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் போட்டோ, வீடியோ எடுத்து வரலாற்று நினைவுகளை பத்திரப்படுத்திக் கொண்டார்கள்.
• மக்கள் கூட்டத்தில் ஊர்ந்து சென்று இறுதிப் பயணத்தை முடித்தார் ஜெயலலிதா
• முப்படை வீரர்கள் ஜெயலலிதா தூங்கும் கண்ணாடிப் பேழை இறக்கி சுமந்து சென்றனர்
-
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications