For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுச்சேரி, நீலகிரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. திருவாரூர், திருப்பூரில் பள்ளி மட்டும்

புதுச்சேரி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கன மழையை அடுத்து திருவாரூர் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல திருப்பூர், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது தமிழகத்தை நோக்கி வருவதால், கடந்த 2 தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. ஏராளமான மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக வெள்ள நீர் சாலைகளில் ஓடுகிறது. தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது.

Leave declared school and collagees in some districts Tamilnadu due to heavy Rain

பலத்த மழை காரணமாக இன்று சென்னை, காஞ்சிபுரம், நாகை, திருநெல்வேலி, கடலூர், தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நாளையும் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல திருப்பூர், நீலகிரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இடைவிடாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுச்சேரியிலும் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Leave declared school and collagees in some districts Tamilnadu due to heavy Rain
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X