வருவார்கள் என்று சொல்லவில்லை... வந்தால் வரவேற்போம்...: கம்யூனிஸ்ட்கள் பற்றி மு.க
சென்னை: திமுக கூட்டணிக்கு இடதுசாரிகள் வந்தால் வரவேற்போம். ஆனால் கண்டிப்பாக வருவார்கள் என்று சொல்லவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கேள்வி:- விடுதலை சிறுத்தைகளுக்கு கூடுதலாக ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளதே?

பதில்:- ஏற்கனவே அவர்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கியது போதாது என்று கூறியதால் மேலும் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கேள்வி:- இடதுசாரி கட்சிகள் தி.மு.க. கூட்டணிக்கு வருவார்களா?
பதில்:- வந்தால் வரவேற்போம் என்று சொல்லி இருக்கிறேன். வருவார்கள் என்று சொல்லவில்லை.
கேள்வி:- இடதுசாரிகளுடன் பேச்சு நடக்கிறதா?
பதில்:- இதுவரை இல்லை.
கேள்வி:- இடது சாரிகள் வந்தால் எத்தனை தொகுதிகள் வழங்கப்படும்.
பதில்:- அதுபற்றி இப்போது சொல்ல முடியாது.
கேள்வி:- தே.மு.தி.க. உங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுத்தும் அவர்கள் பா.ஜனதா அணிக்கு சென்று விட்டார்களே?
பதில்:- அதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications