வெயில் அதிகரிப்பால் விலை உயர்ந்த எலுமிச்சை – விவசாயிகள் மகிழ்ச்சி
நெல்லை: சுட்டெரிக்கும் வெயில் காரணமாக எலுமிச்சை பழங்களின் விலைகடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் எலுமிச்சை விவசாயிகள் உற்சாகத்தில் உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் எலுமிச்சை உற்பத்தி மற்றும் விற்பனையில் புளியங்குடி முதலிடம் வகிக்கிறது. குறிப்பாக புளியங்குடி, டிஎன் புதுக்குடி, பகுதியில் எலுமிச்சை மார்க்கெட்டுகள் உள்ளன.

இங்கு சுமார் 29 கடைகளில் விவசாயிகள் கொண்டு வரும் எலுமிச்சை பழங்கள் ஏலம் மூலம் ஆயிரம் பழங்களுக்கு இவ்வளவு என விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
சாதாரண காலங்களில் ஆயிரம் பழங்கள் வெறும் ரூபாய் 500க்கு கூட விலை போகாது. ஏப்ரல், மே ஆகிய கோடை காலங்களில் 1000 பழங்கள் ரூபாய் 5 ஆயிரத்திற்கு மேல் விற்பனை ஆகின்றன.
மற்ற மாதங்களில் எலுமிச்சையில் சாகுபடியில் ஏற்படும் இழப்பை இந்த மாதத்தில் சரி செய்து விடுவர் விவசாயிகள். கடந்த நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் கோடை மழை பெய்த போது 1000 பழங்கள் ரூ.2500 முதல் ரூ.3500 வரை மட்டுமே விலை போனது.
இதனால் விவசாயிகள் கவலையில் உறைந்தனர். இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் எலுமிச்சை விலையும் உயர தொடங்கியுள்ளது.
இன்று காலை 7 மணி முதல் 1000 பழங்கள் ரூ.4500 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும், பச்சை எலுமிச்சை காய்கள் ரூ.1500 முதல் ரூ.3500 வரையிலும் மார்க்கெட்டில் ஏலம் போயின.
இதனால் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் ஆயிரம் பழங்கள் விலை ரூ.5 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில்லரை மார்க்கெட்டில் ஒரு பழம் ரூ.6 முதல் ரூ.7 வரை விற்கப்படும் என தெரிகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications