ஆட்டம் காட்டும் சிறுத்தை.. மயிலாடுதுறையில் நாளை 9 பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை சுற்றித்திரிவது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதனை பிடிக்க போலீசார், வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இதற்கிடையே மக்களின் பாதுகாப்பு கருதி நாளை மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுத்தை சுற்றித்திரிவது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பற்றி வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து செம்மங்குளம் பகுதியை சுற்றியுள்ள ஊர் பொதுமக்களுக்கும் தேவையின்றி வெளியே வர வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டது.
தொடர்ந்து போலீசார், வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் 10 குழுக்களாக பிரிந்து சிறுத்தையை பிடிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் இன்று சிறுத்தை நடமாட்டத்தால் மக்களின் பாதுகாப்பு கருதி மயிலாடுதுறையில் உள்ள 7 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், 3 பள்ளிகளில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் நடந்ததால், மாணவ மாணவிகள் பாதுகாப்புடன் தேர்வு எழுதுவைதை உறுதி செய்ய போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இப்போது வரை சிறுத்தை புலி கண்டுபிடிக்கப்படாததால், பாதுகாப்பு கருதி நாளை 05.04.2024 அன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது மட்டும் இன்றி இன்று இரவுக்கு சிறுத்தையை பிடிப்பதற்காக பல இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். மேலும் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விரைவில் சிறுத்தை பிடிபட்டுவிடும் என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications