சென்னையில் இன்று சில இடங்களில் திடீர் லேசான மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று திடீரென லேசான மழை பெய்தது
கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொட்டி தீர்த்த மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன.

மழை ஓய்ந்து மக்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், இன்று மாலை சென்னை மெரினா கடற்கரை, திருவல்லிக்கேணி, சிந்தாதரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது.

வட தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியை ஒட்டியுள்ள மாலத்தீவு கடலில் மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 3 நாட்களுக்கு பிறகு வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications