சின்னத் தூறலுடன் சென்னைக்கு விசிட் அடித்து விட்டுப் போன மழை!
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் விடாமல் மழை வெளுத்து வாங்கி வந்த போதிலும் தலைநகர் சென்னையில் லேசான மழையாக அது மாறியதால் மக்கள் சற்றே கடுப்பாகிப் போனார்கள்.
கடும் வெயிலின் பிடியில் சிக்கித் தவித்த முக்கிய நகரங்களில் சென்னைக்கு முதலிடம் உண்டு. இந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மக்களும் மழையை எதிர்பார்த்துள்ளனர்.

ஆனால் நேற்று இரவும், அதிகாலையிலும் லேசான மழை பெய்த நிலையில் பகலில் பல இடங்களில் வெயிலும், மேகமூட்டமுமாக மாறி மாறி கிளைமேட் விளையாட்டு காட்டிக கொண்டிருந்தது.
இந்த நிலையில் சற்று முன்பு பல இடங்களில் லேசான தூறல் காணப்பட்டது. சில இடங்களில் மிதமான மழை காணப்பட்டது. ஆனால் பெரிய மழையாக இது மாறவில்லை.
திடீர் மழையால் மக்கள் சந்தோஷமடைந்த போதிலும் இதனால் வாக்குப் பதிவுக்குப் பாதிப்பு ஏற்படும் அளவுக்கு தாக்கம் இல்லை. பெரிய மழை பெய்யும் வெட்கை தணியும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு மழை கொடுத்தது என்னவோ பெரிய அல்வாதான்!












Click it and Unblock the Notifications