சென்னையில் சட்டென்று மாறிய வானிலை.. திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் பிற்பகல் நேரத்தில் பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது.
சென்னை: சென்னையில் காலைமுதலே வெயிலடித்த நிலையில் பிற்பகலில் சட்டென்று வானிலை மாறியது. திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
வளிமண்டல கீழடுக்கில் காற்று சுழற்சி நீடிப்பதால் வடதமிழகம் முதல் தென்தமிழகம் வரை அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தென்மேற்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. தென் மாநிலங்களில் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்கிறது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
வானிலையின் கணிப்பு பொய்யாகவில்லை. பிற்பகல் நேரத்தில் திடீர் என மெரீனா கடற்கரை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூரில் மழை பெய்தது. சாரல் மழையாக தொடங்கி கனமழையாக கொட்டித்தீர்த்தது. முகப்பேர், பட்டினப்பாக்கம், மந்தைவெளியிலும் கனமழை பெய்தததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
காலை முதலே வெயிலடித்த நிலையில் பிற்பகலில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. திடீர் குளிர் காற்று வீசியது திடீரென மழை கொட்டித் தீர்த்தது.
மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், முகப்பேர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது.
-
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன்












Click it and Unblock the Notifications