கட்டண குறைப்பு... மத்திய அரசு மாதிரியே ஸ்டன்ட் அடிக்கும் அதிமுகவை பாருங்க மக்களே!
பெட்ரோல் டீசல் விலை விவகாரத்தில் மத்திய அரசு எத்தகைய நிலைப்பாட்டை கடைப்பிடிக்கிறதோ அதே நிலைப்பாட்டை மாநில அரசும் பேருந்து கட்டண விவகாரத்தில் கடைப்பிடிக்கிறது.
Recommended Video

சென்னை: பெட்ரோல் டீசல் விலை விவகாரத்தை பொருத்தமட்டில் விலையேற்றத்தின் போது ரூபாய் கணக்கிலும், குறைக்கும் போது பைசா கணக்கிலும் மத்திய அரசு செய்வதை போல் மாநில அரசும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும்போது ரூபாய் கணக்கிலும் குறைக்கப்படும் போது பைசா கணக்கிலும் செய்கிறது.
கச்சா எண்ணெய்யின் விலை சந்தையில் கூடுவது, குறைவதற்கேற்ப பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றிக் கொள்ளும் குறைத்துக் கொள்ளும். அச்சமயம் பெட்ரோல் டீசல் விலையை ரூபாய் கணக்கில் உயர்த்தும். ஆனால் கச்சா எண்ணெய் குறையும் போது வெறும் பைசா கணக்கில் மட்டுமே குறைக்கும்.
இதில் பெட்ரோல்- டீசல் விலை ஏற்றப்பட்டாலும் நாங்கள் குறைத்தோம் என்று மத்திய அரசு மார்தட்டி கொள்ளும்.

தமிழக அரசு நடந்து கொள்கிறது
மத்திய அரசுக்கு இணக்கமாகவே தமிழக அரசு நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் பேருந்து கட்டணத்தை 66 சதவீதமாக தமிழக அரசு உயர்த்தியது.

திரும்ப பெற கோரி போராட்டம்
கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி தமிழகத்தில் உள்ள மாணவர்கள் கடந்த 5 நாட்களுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பேருந்து கட்டணம்
மக்கள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைப்பதாக கூறி அனைத்து நிலைகளிலும் ரூ. 1 -ஐ குறைத்துள்ளது. இதை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று திமுக கோருகிறது.

தமிழக அரசு பின்பற்றும்
பெட்ரோல் டீசல் விலை ஏற்றம், இறக்கத்தின்போது மத்திய அரசு எப்படி செயல்படுகிறதோ அதுபோல் மாநில அரசும் நடந்து கொள்கிறது. பேருந்து கட்டண உயர்த்தப்பட்டபோது ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் 50 சதவீதத்துக்கு மேல் உயர்த்தியது. ஆனால் குறைக்கும் போது பைசா கணக்கில் குறைக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பயனும் இல்லை என்றே கூறப்படுகிறது. மக்களின் சுமையும் குறைய போவதில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications