சரக்கு, பிரியாணி, ரூ.500- மதுரை இளைஞர் விழாவுக்கு ஆள் பிடித்த எடப்பாடி கோஷ்டி- தாக்கும் தீபா 'கேங்'
மதுரையில் நடக்கும் இளைஞர் விழாவில் கலந்துகொள்ளும் இளைஞர்களுக்கு,மது பாட்டிலும் பிரியாணியும்,தலா ஒருவருக்கு ரூ.500 ம் கொடுத்து கூட்டம் சேர்க்கிறது எடப்பாடி பழனிச்சாமி அணி என்று பரபரப்பு புகார் கூறியுள
சென்னை: மதுவும் பிரியாணியும் கொடுத்து செலவுக்கு ரூ.500 ம் கொடுத்து மதுரை இளைஞர் விழாவுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்கள் ஆள்பிடிக்கிறார்கள் என்று தீபா பேரவையினர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து தீபா பேரவையில் தலைமை செய்தி தொடர்பாளர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்!

"எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிர்வாகிகள், சசிகலாவின் பினாமி முதல்வர் பழனிசாமி தலைமையில் இணைந்ததாக ஊடகங்களில் வந்துள்ள செய்தி முற்றிலும் தவறானதாகும்.
இணைந்தவர்களுக்கும் எங்கள் அமைப்புக்கும் துளி அளவுக்கூட தொடர்பில்லை. மாநில,மாவட்ட நிர்வாகிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் இணைந்ததாக கூறுவது இமாலய பொய்யாகும்.மாறாக சசிகலா அணி பிள்ளைப் பிடிக்கும் பூச்சாண்டியைப் போல அமைச்சர்கள் முதல் ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
மதுரையில் இளைஞர்கள் விழா என்ற பெயரில் பினாமி முதல்வர் எடப்பாடி கலந்துக்கொள்ளும் கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பதற்காக தலைக்கு 500ரூபாய் மற்றும் பிரியாணி மதுபாட்டில்கள் விநியோகித்து அரசு பஸ்களை இலவசமாக இயக்கி வருகிறார்கள்.
மதுரையில் குடிநீர் பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது. தென் தமிழகத்தில் கலாச்சாரத்திருவிழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெறும் இத்தருணத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் சசிகலா அணியினர் விழா நடத்துவதை பொதுமக்கள் விரும்பவில்லை.மாறாக கண்டிக்கிறார்கள்.
திருவிழா நடைபெறுவதற்கு வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிட முடியாத கையாளாகத எடப்பாடி அரசை எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
எங்கள் பேரவையை சேராதவர்களை, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையோடு இணைத்து தொடர்ந்து செய்தி வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications