மதுவிலக்கு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வைகோ பரிசளிப்பு
கோவை: கோவையில் நேற்று காலை 6.30 மணிக்கு சுந்தரராபுரம் உழவர் சந்தையில் நடந்த மதுவிலக்கு மராத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உள்பட 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டி 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் தனித்தனிப் பிரிவாகவும், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் தனித்தனி பிரிவாகவும், 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவரையும் கொண்ட பொதுப்பிரிவு கொண்டவர்களாக மொத்தம் 5 பிரிவுகளாக நடத்தப்பட்டது.

கடந்த ஒரு மாத காலமாக இதற்கான முயற்சியில் கோவை தடகள சங்க உறுப்பினர்களோடு இணைந்து நமது கோவை மாவட்டக் கழக இளைஞர் அணி, மாணவர் அணி, கட்சி நிர்வாகிகள் அனைவரும் எடுத்த முயற்சியின் காரணமாக 10,000க்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார்கள்.
நேற்று காலை சரியாக 6.30 மணியளவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பொதுப்பிரிவையும், அதன் பிறகு 15 மீட்டர் இடைவெளியில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவையும், அடுத்த 15 நிமிடத்திற்கு பிறகு மாணவிகளுக்கான பிரிவையும், அதற்கு பிறகு 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பிரிவையும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார்.
6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களோடு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஓடினார்.
ஒவ்வொரு பிரிவும் சுந்தரராபுரம் உழவர் சந்தையில் இருந்து தொடங்கி நிர்ணயிக்கப்பட்ட 5 கிலோ மீட்டர் தூரமான மதுக்கரை மார்க்கெட்டை வந்தடைந்தனர்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடம் பிடித்தவர்களுக்கு பதக்கம் அணிவித்து, ரொக்கப்பரிசளித்து, பாராட்டுச் சான்றிதழையும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வழங்கினார்.
அதுமட்டுமல்லாமல் ஆர்.ஆர்.சி. சினேகலயா எச்.ஐ.வி பாதிப்போர் அமைப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 7 பேர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். அந்த 7 பேரையும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேடைக்கு அழைத்து கவுரவித்தார்.
அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் எந்த பகுதியில் மாரத்தான் போட்டி நடந்தாலும் தொடர்ந்து கலந்து வருகின்ற 74 வயதான முன்னாள் இராணுவ வீரர் லெட்சுமணன் அவர்களையும் மேடைக்கு அழைத்து பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.
மேலும் போட்டி நடந்த 5 கிலோ மீட்டர் தூரத்தையும் முழுமையாக ஓடிய உடல் ஊனமுற்ற பள்ளிச் சிறுவன் வெள்ளியங்கிரிக்கும் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதலும் வழங்கினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications