டாஸ்மாக் தொடர் விடுமுறை.. ஆந்திரா, புதுச்சேரிக்கு படையெடுக்கும் குடிமகன்கள்!

டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 3 நாள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திரா, புதுச்சேரி மாநிலத்துக்கு குடிமகன்கள் படையெடுத்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை ஒட்டி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் குடிமகன்கள் பலரும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, புதுச்சேரிக்கு படையெடுத்து வருகின்றனர்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததையொட்டி, தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுகள், பார்களுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. கடந்த 3 நாட்களாக மதுவிற்பனை தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். வேறு வழியில்லாமல் அருகில் உள்ள ஆந்திர மாநிலம், புதுச்சேரி, கேரளா மாநிலத்துக்கு குடிமகன்கள் நேற்று படையெடுத்தனர்.

liquor sales hits record high in Puducherry

இதனால், இவ்விரு மாநிலங்களிலும் சரக்கு விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. குறிப்பாக, புதுச்சேரி, கேரளா எல்லையை ஒட்டிய களியக்காவிளை அருகே உள்ள மதுக்கடைகளில் கடந்த 3 நாட்களாக தமிழகக் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. பலரும் இக்கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

சிலர் சரக்குகளை வாங்கி அருந்தி விட்டு, தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி பைகளில் நிரப்பி கொண்டு வருகின்றனர். இதனால், ஆந்திர எல்லையோர டாஸ்மாக் கடைகளில், குடிமகன்கள் கூட்டம் அலை மோதுகிறது. சிலர் போலீசுக்கு தெரியாமல் அங்கிருந்து சரக்குகளை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்றனர். மேலும், புதுச்சிரி எல்லையை ஒட்டிய பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் கடந்த 3 நாட்களாக தமிழகக் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+