Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்தாண்டு கொண்டாட்டம்.. குடித்துக் குவித்த குடிகாரர்களால்.. ரூ.210 கோடி மது விற்பனை !

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி டாஸ்மாக்கில் ரூ.210 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளில் மிகப் பெரிய அளவில் விற்பனை நடந்துள்ளதாம். இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.210 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுபான கடைகளில் வழக்கமான நாட்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 60 கோடிக்கும், சனி மற்றும் ஞாயிறு கிழமை உள்ளிட்ட இதர விடுமுறை நாட்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூபாய் 80 கோடிக்கும் மேல் விற்பனை நடைபெறும்.

 Liquor sales worth rs.210 crore in this new year

திருமணம், கோயில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களில் மது பிரியர்கள் ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் கடைகளை நோக்கி படை எடுப்பதால் ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது.

இந்த வருடம் புத்தாண்டையொட்டி மதுபிரியர்கள் தங்களது விருப்பமான மதுவகைகளை வாங்கி நண்பர்களுடன் அருந்தி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடிவிடுவார்கள் என்பதால் ஒருசிலர் கூடுதலாக மதுவகைகளை வாங்கி வைத்து நள்ளிரவு 12 மணிக்கு மது அருந்தினர்.

இந்நிலையில் புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளில் மிகப் பெரிய அளவில் விற்பனை நடந்துள்ளதாம். இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.210 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இருதினங்களில் மட்டும் இந்த அளவுக்கு விற்பனை நடைபெற்றுள்ளாதாக டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+