ஜூலைக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதாக சொன்னீர்களே? ஹைகோர்ட்டில் காரசார வாதம்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஹைகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் மீது ஜூலை 14ம் தேதி விசாரணை நடைபெற உள்ளது
சென்னை : உள்ளாட்சித் தேர்தலில் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் ஜூலை 14ம் தேதி விசாரணைக்கு எடுத்தக் கொள்ளப்பட உள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலுக்கான இடஒதுக்கீட்டு முறையில் குளறுபடிகள் இருப்பதாக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் நூட்டிராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட அமர்வு, மே 14 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது.

சமூக ஆர்வலர் வழக்கு
இந்நிலையில், இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக்கொள்ள அனுமதி கோரி மாற்றம் இந்தியா அமைப்பின் பாடம் நாராயணன் ஒரு இணைப்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ஏப்ரல் 24ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி புதிய பிரதிநிதிகள் பொறுப்பேற்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கூடாது என்றும் அவர் தன்னுடைய மனுவில் கூறியிருந்தார்.

நீதிமன்றத்தில் உறுதி
இதனிடையே நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மாநிலத்தேர்தல் ஆணையம் மீது திமுக அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது ஜூலை மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பிராமணப் பத்திரமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

திமுக வாதம்
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பு வழக்கறிஞர் ஜூலை மாதத்திற்குள் தேர்தல் நடத்துவதாக கூறிவிட்டு தற்போது அதற்கான எந்த நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தார். எனவே மாநில தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக சம்மன் அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஜூலை 14ல் விசாரணை
இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வக்கீல், வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணை ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே தனி அலுவலரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது குறித்தும் விசாரணை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications