தொடரும் கந்துவட்டி டார்ச்சர்.. ஈரோடு அருகே லாரி உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை
கந்துவட்டி கொடுமை காரணமாக லாரி உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோடு: கந்து வட்டி கொடுமை காரணமாக ஈரோட்டில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது சம்பந்தமாக போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
கந்துவட்டி கொடுமைக்கு நெல்லை மாவட்டத்தில் ஒரு குடும்பமே பலியாகியும், கந்துவட்டி கொடுமை தமிழகத்தில் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டாரின் தற்கொலை எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஈரோடிலும் கந்துவட்டி டார்ச்சர் தாங்காமல் ஒருவர் மனமுடைந்து தற்கொலையில் செய்துகொண்டார்.

சோலார் அடுத்த நகராட்சி நகரை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவர் லாரி உரிமையாளராக உள்ளார். ஒரு நிதி நிறுவனத்திடம் ரூ.5 லட்சம் கடன் கேட்டுள்ளார். தட்சணாமூர்த்தியிடம் லாரி உள்ளதால், நிதி நிறுவனமும் அவர்கேட்ட தொகையை கடனாக வழங்கியது. ஆனால் வாங்கிய ரூ. 5 லட்சத்துக்கு அதிகமாக வட்டி தர வேண்டும் என்று நிதி நிறுவனத்தினர் தட்சணாமூர்த்தியை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் வட்டி பணத்துக்காக அவரை தகாத வார்த்தைகளில் பேசியதுடன், அவரிடமிருந்த 2 லாரிகளையும் எடுத்து சென்றது. இதனால் லாரியை வைத்தே பிழைப்பு நடத்தி வரும் தட்சணாமூர்த்தி, கடும் அதிர்ச்சியடைந்தார்.
லாரிகள் போய்விட்டதே என்ற மன வருத்தத்தில் இருந்த தட்சிணாமூர்த்தி யாரிடமும் சரிவர பேசாமலும், சாப்பிடாமலும் இருந்துள்ளார். இந்நிலையில் தட்சணாமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நிதி நிறுவனத்தாரிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications