நாடு முழுவதும் அக். 1 முதல் லாரி ஸ்டிரைக்... வடமாநிலத்துக்கு சரக்கு போக்குவரத்து நிறுத்தம்
சென்னை : நாடு முழுவதும் அக்டோபர் 1 ம் தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்குவதையடுத்து வட மாநிலங்களுக்கான சரக்கு புக்கிங் நிறுத்தப்பட்டுவிட்டது.
வேலை நிறுத்தத்திற்கு முன்பாகவே தினமும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரியும், ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வலியுறுத்தியும் நாடு முழுவதும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் இல்லை. லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த கெடு முடிவதற்கு இன்னும் 3 நாள் மட்டுமே இருப்பதால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்றே கூறப்படுகிறது.
வரும் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 92 லட்சம் சரக்கு வாகனங்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 7 லட்சம் சரக்கு வாகனங்கள் உள்ளன. இதில் 4 லட்சம் லாரிகள் தமிழகத்தில் இருந்து பல்வேறு வெளி மாநிலங்களுக்கு சென்று வருகின்றன.
லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்றால் தினமும் 15 ஆயிரம் கோடி ரூபாக்கும் மேல் இழப்பு ஏற்படும். லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் ஒரு லட்சம் லாரி புக்கிங் ஏஜெண்டுகளும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
வெளி மாநிலங்களுக்கு சரக்கு புக்கிங் செய்து கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏஜெண்டுகளும் பங்கேற்பதால் சரக்கு போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜவுளி, மஞ்சள், அரிசி, ஜவ்வரிசி, பலவகை எண்ணை, மரப்பொருட்கள், இயந்திர உபகரணங்கள், சிமென்ட், இரும்பு கம்பி உள்பட பல்வேறு பொருட்கள் வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தமிழகத்தில் இருந்து சரக்கு செல்லவேண்டுமெனில் குறைந்தபட்சம் 4 நாட்களுக்கு முன்பு சரக்கு புக்கிங் செய்யவேண்டும். குறிப்பட்ட காலத்திற்குள் சென்றடையவேண்டிய பொருட்கள் என்றால் முன்கூட்டியே இங்கிருந்து செல்லவேண்டியிருக்கும். தற்போது லாரி ஸ்டிரைக் 1ம் தேதி அறிவிக்கப்பட்டதால் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, தமிழக முதல்வர் இது குறித்து தலையிட்டு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications