காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்தது.. நாளை முதல் தமிழகத்தில் மழை பெய்யுமாம்!
காற்றழுத்த தாழ்வு பகுதி மாலத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலைக்கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதி மாலத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலைக்கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் இறுதி மற்றும் மே மாதங்களில்தான் வெயில் கொளுத்தும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியிலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது.
சுட்டெரிக்கும் வெயிலால் நீர்நிலைகள் வேகமாக வற்ற தொடங்கியுள்ளன. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.

காற்றழுத்தம்
இந்நிலையில் தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மேகமூட்டமும் அவ்வப்போது வெயிலும் நிலவி வருகிறது.

தாழ்வு மண்டலமானது
இந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலத்தீவு அருகே நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை
இதன்காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழகம், கன்னியாகுமரி, மாலத்தீவு பகுதிக்கு மேலும் 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
கடற்பகுதியில் 45 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வரும் 15ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று வீசும்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் குமரி கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு இடையே நிலை கொண்டிருப்பதாகவும் இதனால் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications