கொளுத்தும் வெயில்.. குற்றாலத்தில் தண்ணீர் வரத்து குறைவு.. சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
குற்றாலத்தில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நெல்லை: வெயில் கொளுத்தி வருவதால் குற்றாலத்தில் தண்ணீர் கொட்டுவது வெகுவாக குறைந்து விட்டது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று குளித்து வருகின்றனர்.
குற்றாலத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு வடகிழக்கு பருவமழை கண்ணாமூச்சி காட்டி வருகிறது. துவக்கத்தில் சாரலாகவும், பின்னர் தூறலாகவும் பெய்த மழை அதன் பிறகு போக்கு காட்டிவிட்டது.

இதனால் தென்காசி, குற்றாலம் பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. விலை நிலங்களில் பயிர் செய்திருந்த பெரும்பாலான பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி விட்டன. விவசாயம் சரியாக இல்லாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே வடமாவட்டங்களில் இருந்து செங்கோட்டை வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் வந்து கொட்டும் நீரில் தலையை நனைத்துவிட்டு செல்வது வழக்கம். பொதுவாக ஜனவரி மாதம் மகர ஜோதி வரை குற்றாலத்தில் ஓரளவிற்கு தண்ணீர் விழும். ஆனால் நடப்பாண்டில் டிசம்பர் மாத தொடக்கம் வரை சரியாக மழை பெய்யாததால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து போய் விட்டது. மேலும், கோடை போல் இந்தப் பகுதியில் வெயில் கொளுத்தி வருகிறது.
இதனால் அருவியில் பாறையை ஒட்டியே தண்ணீர் விழுகிறது. அந்த நீரில்தான் ஐயப்ப பக்தர்கள் தலையை நனைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதல் லேசான சாரல் பெய்து வருகிறது. இது தொடர்ந்தால் ஓரளவுக்கு தாக்கு பிடிக்கலாம் என்கின்றனர் இப்பகுதிவாசிகள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications