லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் 29ம் தேதி வேட்புமனு தாக்கல் துவக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 29ம் தேதி தொடங்குகிறது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி முதல் மே மாதம் 12ம் தேதி வரை 9 கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுவையில் உள்ள ஒரு தொகுதிக்கு ஏப்ரல் 24ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 5ம் தேதி மனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9ம் தேதி கடைசி நாள் ஆகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications