பிளஸ்-2 மாணவியின் விடைத்தாள் மாறிய விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு: கல்வி அமைச்சர் வீரமணி
சென்னை: கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கவிதாமணி என்ற மாணவியின் விடைத்தாள் மாறியதில் அவர் பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மாணவி கவிதாமணி. இந்த வருடம் பிளஸ்-2 தேர்வினை நன்கு எழுதியிருந்த இவருக்கு கடந்த மாதம் வெளியான தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. பொருளியல் பாடத்தில் அவர் தோல்வி அடைந்திருந்தார்.

ஏழ்மையான குடும்பத்தினைச் சேர்ந்த அம்மாணவி உடனடியாக விடைத்தாளுக்கு விண்ணப்பித்திருந்தார். விடைத்தாள் பெற்று பார்த்தபோதுதான் அவருடைய பொருளியல் விடைத்தாள் மாறியிருந்தது தெரிய வந்தது. அவருடைய கையெழுத்தில் இல்லாத விடைத்தாளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து இவ்விடைத்தாள் மாற்றம் குறித்து கவிதாமணி பள்ளிக் கல்வித்துறையில் புகார் அளித்தார். இவ்விவகாரம் குறித்து பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி மாணவியின் விடைத்தாள் மாறியது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவியின் பொருளியல் விடைத்தாள் திருத்தப்பட்ட ஆம்பூரில் இருக்கலாம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications