விவசாயிகளை உயிரோடு புதைக்கும் திட்டமா?.. அனல் கக்கும் பழநிபாரதி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: விளைநிலங்களில் கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிக்க தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், விவசாயிகள் எல்லாம் நடுங்கிப் போய் அதிர்ச்சியில் மூழ்கியுள்ள நிலையில், அந்த வேதனையை தனது கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார் பாடலாசிரியர் பழநிபாரதி.
இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு...

கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிக்கப்படும்
விவசாய நிலத்தின் கீழ்
மரங்கள் நடக்கூடாது...
சரி...
கிணறு தோண்டக்கூடாது...
சரி...
வேர்கள் ஆழமாகப் பரவும் எதையும் பயிரிடக் கூடாது...
சரி...
விவசாய நிலம் தோண்டப்படுவது
எரிவாயுக் குழாய்களைப் பதிக்கவா?
இல்லை...
விவசாயிகளை
உயிரோடு புதைக்கவா?
- பழநிபாரதி












Click it and Unblock the Notifications