மதுரை-திண்டுக்கல் கிரிக்கெட் போட்டியை நத்தம் மைதானத்தில் நேரில் ரசித்த மு.க.அழகிரி
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: தமிழகத்தில் முதல் முறையாக டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 24ம் தேதி தொடங்கிய இத்தொடரில், சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கிறது.
மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தயா அழகிரி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நத்தம் என்.பி.ஆர் மைதானத்தில் இன்று மதுரை-திண்டுக்கல் அணிகள் மோதின.

இப்போட்டியை மு.க.அழகிரி, தயா அழகிரி உள்ளிட்டோர் மாடத்தில் அமர்ந்து ரசித்தனர். மைதானத்து பெரிய திரையில் அவர்களை காண்பித்தபோது, ரசிகர்கள் கர கோசம் எழுப்பி உற்சாகம் வெளிப்படுத்தினர்.
திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள அழகிரி, அரசியலில் ஈடுபடாமல் இப்படி ஓய்வாக பொழுதை போக்கிவருவது அவரது ஆதரவாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications