அலங்காநல்லூரில் போலீஸ் தடியடி.. கைது.. மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்ததற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று கோரி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசார் தடியடி நடத்தி கைது செய்துள்ளது. இதற்கு திமுகவின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தர வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்திய இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். 21 மணி நேரத்திற்கும் மேலாக போராடிய இளைஞர்கள் மீது தடியடி நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

M.K. Stalin condemns arrest of Jallikattu supporters

மேலும், இளைஞர்கள் மீதான தாக்குதல் தமிழக பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் அதிகாரி சமாதானம் செய்தும் அதனை அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+