For Daily Alerts
Just In
ஷூ காலால் உதைத்தனர்.. ஆளுநரிடம் புகார் அளிக்க கிழிந்த சட்டையுடன் கிளம்பினார் ஸ்டாலின்
சென்னை: சட்டசபைக்குள் ஷூ காலால் காவலர்கள் தன்னை உதைத்து அடித்ததாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நேரத்தில் நேர்ந்த அமளியால் 1 மணிக்கு சட்டசபை கூட்டப்பட்டு மீண்டும் அமளி நிலவியதால் 3 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது, திமுக உறுப்பினர்கள் உள்ளேயே தர்ணாவை தொடர்ந்தனர்.
இந்த இடைவெளியில் திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் அவை காவலர்களால் தாக்கப்பட்டு குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து கிழிந்த சட்டையோடு வெளியே வந்த ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், "அவைக்காவலர்கள் எங்களை ஷூ காலால் உதைத்து, தாக்கி துன்புறுத்தினர்,. இதில் எனது சட்டை கிழிந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு நேர்மையாக நடைபெறவில்லை. எனவே இதுகுறித்து ஆளுநரிடம் புகார் அளிக்க செல்கிறேன்" என கூறி ஆளுநர் மாளிகை நோக்கி விரைந்தார்.
Comments
English summary
M.K.Stalin headed towards Governor Vidyasagar Rao to file complaint against Tamilnadu speaker.
Story first published: Saturday, February 18, 2017, 15:06 [IST]