புயல் பாதித்த குமரிக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம்... ஆளுநரிடம் ஸ்டாலின் மனு!
ஓகி புயல் பாதித்த கன்னியாகுமரிக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : ஓகி புயல் பாதித்த கன்னியாகுமரிக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம், குமரியை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை திமுக செயல் தலைவர்மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து வழங்கியுள்ளார். ஆளுநர் இந்த மனுவை பிரதமருக்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஆளுநர் மாளிகையில் இன்று நேரில் சந்தித்தார். கன்னியாகுமரி புயல் பாதிப்புகள் விவகாரத்தில் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் ஆளுநரிடம் கோரிக்கை மனு ஒன்றையும்அளித்துள்ளார். இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :

ஒகி புயல் பாதிப்புகள் குறித்து ஆளுநரிடம் விளக்கமாக எடுத்து சொல்லி இருக்கிறோம். புயல் நிவாரணத்திற்காக மத்திய, மாநில அரசுகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. எனவே போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
மீனவர்கள் காணாமல் போனது குறித்து தலைமைச் செயலாளர், மீனவளத்துறை அமைச்சர், முதல்வர் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணக்கை சொல்கின்றனர். எத்தனை வீடுகள் புயலால் சேதமடைந்திருக்கிறது என்ற விவரம் கூட இன்னும் அரசிடம் இல்லை. நேற்று தான் ஏதோ பெயர் அளவிற்கு முதல்வர் பழனிசாமி கன்னியாகுமரி சென்று ஒரு அரங்கத்தில் கூட்டத்தை நடத்தி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மீனவர்களையோ, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களையோ முதல்வர் பார்க்கவில்லை, இப்படி ஒரு அறிவிப்பை அவர் சென்னையில் இருந்தே வெளியிட்டிருக்கலாம் என்று மக்கள் கண்ணீர் விடுகின்றனர். எனவே ஆளுநரை சந்தித்து பாதிக்கப்பட்டவர்களுக்கும், ரப்பர், வாழை தோட்ட விவசாயிகளுக்கு பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறத்தியுள்ளோம்.
அண்டை மாநிலமான கேரளா செய்வதில் பாதியை செய்யாவிட்டாலும் அதில் 10 சதவீதத்தையாவது தமிழக அரசு செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். நிச்சயமாக இந்த கோரிக்கை மனுவை பிரதமருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். ஆளுநரும் நேற்று டெல்லி சென்று அமைச்சர்களை சந்தித்து புயல்பாதிப்பு குறித்து எடுத்துச் சொல்லி இருப்பதாக எங்களிடம் தெரிவித்துள்ளார் என்று ஸ்டாலின் கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications