கடலில் எவ்வளவு எண்ணெய் கலந்திருக்குன்னே அமைச்சருக்கு தெரியல.. ஸ்டாலின் குற்றச்சாட்டு
எண்ணூர் கடலில் எவ்வளவு எண்ணெய் கலந்திருக்கின்றது என்பதே அமைச்சர் ஜெயக்குமாருக்கு தெரியவில்லை என்று மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: எண்ணூரில் கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
எண்ணூர் பகுதியில் பாதிப்புக்குள்ள மீனவர்களிடம் ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், கடலில் எண்ணெய் பரவியுள்ளதால் மீனவர்களுக்கு உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இடைக்கால நிவாரணத்தை மத்திய, மாநில அரசுகள் விரைந்து வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரினார்.

கப்பல்கள் மோதி கச்சா எண்ணெய் கடலில் கொட்டியதால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசு மற்றும் மீனவர்களுக்கு ஏற்பட்டு பாதிப்புகளுக்கான இழப்பீடுகளை பெறும் வகையில் வழக்குகளை நடத்த வேண்டும் என்று கூறிய மு.க.ஸ்டாலின், இதுகுறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை எண்ணெய் பரவியுள்ளதால் நெம்மேலியில் செயல்படும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கேள்விக்குறியாகி உள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
கப்பல் மோதிய விபத்தில் கடலில் எவ்வளவு கச்சா எண்ணெய் கலந்துள்ளது என்ற விவரம் கூட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு தெரியவில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications