இன்று நாகர்கோவில் வருகின்றார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கட்சியின் பொருளாளர் மு.க ஸ்டாலின் நாளை நாகர்கோவிலில் ஆலோசனை நடத்துகிறார். இதற்காக அவர் இன்று மாலை நாகர்கோவில் வருகிறார்.
மு.க. ஸ்டாலின், மாவட்டம்தோறும் திமுக நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். குமரி மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க அவர் இன்று மாலை நாகர்கோவில் வருகிறார்.

அதன்படி, திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகிறார். இரவு கன்னியாகுமரியில் தங்கும் அவர் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள உடுப்பி ஹோட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பிற்பகல் 3 மணிக்கு அவர் பேரூராட்சி, ஊராட்சி, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றியச் செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மாலை 5 மணிக்கு, கட்சி நிர்வாகிகளுடன் அவர் நாகர்கோவில் வைரவி மண்டபத்தில் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications