Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் சூர்யா உள்பட 8 நடிகர்களுக்கான பிடிவாரண்டுக்கு தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசிய வழக்கில், நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 பேர் மீதான பிடிவாரண்ட்டுக்கு சென்னை ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 நடிகர்களுக்கான பிடிவாரண்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசியதாக நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், சேரன், சரத்குமார், விவேக், விஜயகுமார், அருண் விஜய், நடிகை ஸ்ரீபிரியா ஆகிய 8 பேர் மீது நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Madras HC banned To warrant for actor surya and others

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகர்கள் விசாரணைக்கு ஆஜராகாததால் 8 பேருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்து நீலகிரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. உதகையை சேர்ந்த பத்திரிகையாளர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதனை அடுத்து பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி 8 பேரும் உதகை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை உதகை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் உதகை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உடனடியாக 8 நடிகர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் சூர்யா,சத்யராஜ் உள்ளிட்ட 8 பேரின் மீதான பிடிவாரண்டுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+