விடுதலை செய்ய கோரிய நளினி மனு மீது தமிழக அரசு முடிவெடுக்கலாம்: சென்னை ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தம்மை சிறையில் இருந்து விடுதலை செய்யக் கோரிய நளினி மனு மீது தமிழக அரசு முடிவெடுக்கலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணண நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

Madras HC disposes Nalini's petition

இந்த விசாரணையின் முடிவில் தம்மை முன்கூட்டிய விடுதலை செய்யக் கோரும் நளினி மனு மீது ராஜிவ் காந்தி கொலைவழக்கில் 7 தமிழரை விடுதலை செய்யக் கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு அடிப்படையில் தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகவும் நீதிபதி சத்தியநாராயணா தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+