சிக்னல்களில் விளம்பர பலகை அகற்ற கோரி வழக்கு.. தமிழக அரசுக்கு ரூ.10000 அபராதம் விதித்த ஹைகோர்ட்

போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகைகளை அகற்ற கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாததை காரணம் காட்டி தமிழக அரசுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தை செலுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை : போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகைகளை அகற்ற கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாததை காரணம் காட்டி தமிழக அரசுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தை செலுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கோவை கன்சுயூமர் அசோசியேசன் சார்பில் கதிர்மதியோன் என்பவர் போக்குவரத்து சிக்னலில் உள்ள விளம்பரங்களை அகற்ற கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Madras HC fined Rs.10,000 to TN govt

முன்னதாக இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்ய காலம் தாழ்த்தியது. இதனை காரணம் காட்டி 10 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு , பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ஜி. ரமேஷ், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. ஆனால் இதற்கு முதலில் அபராதத்தை கட்ட நீதிபதிகள் அறிவுறுத்தினர். பின்னர் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை வருகிற மார்ச் 24ம் தேதி தள்ளிவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+