அதிமுக வன்முறை: இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: அதிமுவினர் நடத்திய போராட்டங்களின்போது சேதப்படுத்தப்பட்ட அரசுச் சொத்துக்களுக்கு இழப்பீடு வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒரு மாதத்திற்குள் இந்தக் கோரிக்கை குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, பெங்களூர் தனிக்கோர்ட் கடந்த மாதம் 27ந் தேதி 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு வெளியானதும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்களிலும், வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டனர். 234 அரசு பஸ்களை சேதப்படுத்தினர். இதில் 2 பஸ்களுக்கு தீ வைத்து முற்றிலும் எரித்து விட்டனர். இது தவிர ஏராளமான பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
கடந்த 2012-ம் ஆண்டு பா.ம.க.வினர் இதுபோல் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டபோது, தமிழக அரசு பொதுச் சொத்துக்களுக்கு உண்டான சேதங்களுக்குரிய தொகையை அந்த கட்சியிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதுபோல, அரசு சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்குரிய தொகையை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்டோரிடம் இருந்து சேதப்படுத்திய அ.தி.மு.க.விடம் இருந்து உரிய தொகையை வசூலிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28-ந் தேதி மனு கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் விசாரித்தது. விசாரணைக்குப் பின்னர் ஒரு மாதத்திற்குள் மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி












Click it and Unblock the Notifications