டி.சி.எஸ் ஊழியரின் பணி நீக்கத்திற்கு இடைக்கால தடை விதித்தது சென்னை ஹைகோர்ட்!
சென்னை: டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் இருந்து அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர் தொடர்ந்த வழக்கில், பணி நீக்கத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை ஹைகோர்ட். பிற ஊழியர்களும், கோர்ட் நோக்கி செல்ல இந்த உத்தரவு ஊக்கம் கொடுத்துள்ளது.
டி.சி.எஸ் நிறுவனம் சுமார் 25 ஆயிரம் பணியாளர்களை வேலையை விட்டு தூக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஐடி ஊழியர்கள் இடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை டி.சி.எஸ் அலுவலகத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு பெண் ஊழியர், தனது நீக்கத்தை எதிர்த்து ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவர் டி.சி.எஸ் நிறுவனத்தில் அனாலைஸ்ட் என்ற பொறுப்பில் இருந்தவராகும். இவருக்கு சி பிரிவு தகுதியை அந்த நிறுவனம் வழங்கியிருந்தது. 2011 மார்ச் மாதம் முதல் இப்பணியை அவர் வகித்துவந்த நிலையில், கடந்த மாதம், 22ம்தேதி, அவர் பணியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார். ஜனவரி 21ம்தேதி பணிக்கான கடைசி நாள் என்று டி.சி.எஸ் நிர்வாகம் அவரிடம் தெரிவித்தது.
ஐடி நிறுவனத்தில் பணியாற்றியபோதிலும், இவரது பணி, தொழிற்சாலைகள் பிரச்சினை சட்டத்தின் பிரிவு 2 (s)ன் கீழ் வருகிறது. எனவே தனது பணி நீக்கத்தை எதிர்த்து அப்பெண் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட ஹைகோர்ட் நீதிபதி துரைசாமி, அப்பெண்ணின் பணி நீக்கத்திற்கு 4 வாரம் இடைக்கால தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை முடிவை பிற ஐடி ஊழியர்களும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
டிசிஎஸ் தொடர்ந்து விப்ரோ.. பாலியல் அச்சுறுத்தல், உடலுறவு, மதமாற்றம்.. பெண் ஐடி ஊழியரின் பகீர் புகார்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications