அம்பேத்கர் சிலைக்கு காவி உடை அணிவிக்கமாட்டோம்..சென்னை ஹைகோர்ட்டில் அர்ஜூன் சம்பத் மீண்டும் உறுதிமொழி
சென்னை: அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளன்று சென்னை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இந்து மக்கள் கட்சிக்கு நிபந்தனையுடன் அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ராஜ அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அவரது மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி அளிக்க பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தினருக்கு உத்தரவிடக் கோரி இந்து மக்கள் கட்சியின் சென்னை வடக்கு மண்டல வழக்கறிஞர் பிரிவு தலைவரான ஏ.அருண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கடந்த காலங்களில் மனுதாரர் கட்சியினர் மாலை அணிவிக்க சென்றபோது சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த முறை அளித்த உத்தரவாதத்தை போல மீண்டும் தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இந்து மக்கள் கட்சி சார்பில், பிறரை பற்றி கோஷங்கள் எழுப்ப மாட்டோம், வாத்தியங்கள் ஏதும் வாசிக்க மாட்டோம், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த மாட்டோம், அம்பேத்கர் சிலைக்கு காவி உடை, சந்தனபொட்டு, விபூதி, குங்குமம் போன்றவற்றை அணிவிக்க மாட்டோம், காவல்துறை வாகனத்தில் சென்று வருவோம் என உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுந்தர் மோகன், ஏப்ர்ல 14ம் தேதி மாலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 9 நபர்கள் மட்டும், காவல்துறை வாகனத்தில் சென்று மாலை 4 மணிக்கு மேல் 4:30 மணிக்குள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

டிசம்பர் 6-ல் நடந்தது என்ன?: அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு காவி உடை, விபூதி, குங்குமம் பூசிய அம்பேத்கர் படத்தை அச்சிட்டு கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் அர்ஜூன் சம்பத் தலைமையிலான இந்து மக்கள் கட்சியினர் ஒட்டியிருந்தனர். இது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையானது. இச்சம்பவம் தொடர்பாக இந்து மக்கள் கட்சி நிர்வாகி குருமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார். அதேநேரத்தில் சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த செல்லும் தமக்கு பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அர்ஜூன் சம்பத் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அம்பேத்கர் சிலைக்கு காவி உடை, விபூதி, குங்குமம் பூச மாட்டோம் என எழுத்துப்பூர்வமான உறுதி மொழி அளிக்க உத்தரவிட்டது. இதனடிப்படையில் அர்ஜூன் சம்பத் சென்னை உயர்நீதிமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக எழுதித் தந்தார். இதன்பின்னர் சென்னை அம்பேத்கர் மணிமண்டபம் சென்ற அர்ஜூன் சம்பத்துக்கு விசிக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தள்ளு முள்ளு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications