பலாத்காரம் செய்தவனுடனேயே சமரசமா? சென்னை ஹைகோர்ட் நீதிபதிக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு!!
சென்னை: சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியுடன் சமரசமாக போகுமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியே பரிந்துரைத்து உத்தரவு பிறப்பித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து போர்க்கொடி தூக்கியுள்ளன.
2002ஆம் ஆண்டு சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் மோகன் என்பவரை குற்றவாளி என கடலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவனுக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூபாய் 5,000 அபராதம் விதித்துத் தீர்ப்பும் அளிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் குழந்தை பிறந்துவிடுகிறது.
அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவதாஸ், பிறந்த குழந்தையின் எதிர்காலம் கருதி இந்த வழக்கில் சமரச மையத்தை அணுக வேண்டும்; இதற்கு பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் குற்றவாளி தரப்பு வழக்கறிஞர்கள் உதவ வேண்டும்; இருதரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இது பெண்கள் அமைப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலாத்காரம் செய்தவனுக்கு தண்டனை வழங்குவதற்குத்தான் நீதிமன்றமே தவிர, இதுபோன்ற சமரசத்துக்கு பரிந்துரப்பதற்காகவா நீதிமன்றம் இருக்கிறது? என்றும் அவர்கள் கொந்தளிக்கின்றனர். இத்தகைய உத்தரவுகள் மோசமான முன்னுதாரணங்களை உருவாக்கும் என்றும் அவர்கள் குமுறுகின்றனர்.
அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலம் கருதி நல்ல முன்மாதிரியான உத்தரவை நீதிபதி தேவதாஸ் பிறப்பித்திருப்பதாகவும் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications