தமிழகம் முழுவதும் வக்கீல்கள் ஸ்டிரைக்.. நீதிமன்றப் புறக்கணிப்பு... ரயில்மறியல்!
சென்னை: வழக்கறிஞர் சட்ட விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தொடங்கியுள்ள காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்ந்து நடக்கிறது. தமிழகம் முழுவதும் வக்கீல்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற பரிந்துரையின்படி, வக்கீல்கள் சட்டப்பிரிவு 34(1)ன் கீழ் விதிகளில் சில திருத்தங்கள் கொண்டு வந்து, தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த விதிகளை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை வக்கீல்கள் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக திங்கட்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் அவசர பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் செவ்வாய் முதல் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துவது எனவும், புதன்கிழமை ரயில் மறியல் போராட்டமும், வரும் 1ம் தேதி புதிய சட்ட விதி நகல் எரிப்பு போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமையன்று காலை வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பை தொடங்கினர். அரசு வக்கீல்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர். இதையடுத்து அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் நீடித்தது.
அடுத்தகட்ட போராட்டமாக கடற்கரை ரயில் நிலையத்தில் வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் சங்க செயலாளர் அறிவழகன் தலைமையில், வழக்கறிஞர் முரளி, சீனிவாசராவ் உள்ளிட்ட ஏராளமானோர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால், கடற்கரை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ரயில் மறியல் போராட்டத்தையடுத்து, கடற்கரை ரயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். தீர்மானித்தது போல வக்கீல்கள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தினர். அப்போது, வக்கீல்கள் சட்ட விதிகளில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். இதையடுத்து வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications