பொறையார் அரசுப் பணிமனை இடிந்த விவகாரம்.. அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு!
பொறையாரில் அரசுப் பணிமனை ஓய்வறை இடிந்து விழுந்த விவகாரத்தில் அரசுப் போக்குவரத்து கழகம் பதிலளிக்குமாறு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : பொறையாரில் அரசுப் பணிமனை ஓய்வறை இடிந்து விழுந்த விவகாரத்தில் அரசுப் போக்குவரத்து கழகம் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், பொறையார் கிராமத்தில் அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பணிமனை இன்று அதிகாலையில் இடிந்து விழுந்தது. இதில் பணியை முடித்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்த 9 பேர் உயிரிழந்தனர்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை பதுப்பித்துத் தரக் கோரியம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததாலேயே கட்டிட விபத்து ஏற்பட்டதாக போக்குவரத்து ழியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தை தாமாக முன் வந்து சுமோட்டோ வழக்காக சென்னை யர்நீதிமன்றம் கையில் எடுத்தது.
கட்டிட இடிபாடுக்கு காரணம் என்ன? இடிந்து விழும் நிலையில் இருந்த கட்டிடத்தை பதுப்பிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் உள்ளிட்ட கேள்விகளை அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு ஹைகோர்ட் கேட்டுள்ளது. 4 வார காலத்திற்குள் இது குறித்து விளக்கமளிக்குமாறும் அரசுப் போக்கு












Click it and Unblock the Notifications