முதல்வருக்கு நெருக்கமான ஏ.கே. போஸ் வீட்டில் குண்டு வெடிக்கும்: கடிதம் மூலம் மிரட்டல்
மதுரை: அதிமுக நிர்வாகி ஏ.கே. போஸின் வீட்டில் இன்னும் 10 நாட்களில் குண்டு வெடிக்கும் என்று கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை வடக்கு தொகுதி அதிமுக உறுப்பினர் ஏ.கே. போஸ். அவரது வீடு மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் உள்ளது. இந்நிலையில் அவரது வீட்டுக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கும், மதுரை கமிஷனர் அலுவலகத்திற்கும் நேற்று மர்ம கடிதம் வந்தது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
கடந்த சில நாட்களுக்கு முன் புத்தூரில் வெடிகுண்டு வைத்திருந்ததாக போலீஸ் பக்ருதீன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்னும் 10 நாட்களில் தமிழக முதல்வருக்கு மிகவும் நெருக்கமான ஏ.கே.போஸ் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும். முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடிதத்தில் போலீஸ் பக்ருதீன் சகோதரர்கள், நெல்பேட்டை, மதுரை என்ற முகவரி இருந்தது. இந்த கடிதம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே போஸ் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications