ஜல்லிக்கட்டு காளையின் வாலை பிடித்தால் வெளியேற்றம்... கலெக்டர் எச்சரிக்கை
ஜல்லிக்கட்டு காளையின் வாலை பிடித்தால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று மதுரை கலெக்டர் வீரராகவராவ் எச்சரித்துள்ளார்.
அவனியாபுரம்: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் காளைகளின் வாலை பிடிக்கக் கூடாது என்றும் அப்படி செய்பவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் எச்சரித்துள்ளார்.
அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் இடத்தில் செய்தியாளர்களிடம் கலெக்டர் மேலும் கூறியதாவது:

மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளை என அனைவருக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 8 ஆம்புலன்ஸ், 5 தீயணைப்பு வாகனங்கள் அவசரகால உதவிக்காக வைக்கப்பட்டுள்ளன.
காலையில் 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டில் பங்கேற்க 919 மாடுகள் பதிவு செய்யப்பட்டது. 470 மாடுகள் கட்டவிழ்த்துவிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்காக மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. அதிக பட்சமாக இன்று மாலை 4 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டி முடிவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மாநகர கமிஷனர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எல்ஈடி டிவிக்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. விதிகளுக்கு உட்பட்ட வகையில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. கால்நடைக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பாதிப்பில்லாமல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்று கலெக்டர் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டியின் போது, மாட்டின் வாலைப் பிடித்தவர்கள், கொம்பைப் பிடித்தவர்கள் உடனடியாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications