பொன்னம்பலம் மீது மோசடி வழக்கு.. 8 வாரத்துக்குள் முடிக்க உத்தரவு

Subscribe to Oneindia Tamil

நடிகர் பொன்னம்பலம் மீது தொடரப்பட்டுள்ள மோசடி வழக்க 8 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே உள்ள சோரம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகர் பொன்னம்பலம் (அ.தி.மு.க. தலைமைக்கழக பேச்சாளர்) மதுரையில் அறக்கட்டளை நடத்தி வருவதாகக் கூறி, அந்த அறக்கட்டளைக்கு நாள் வாடகை அடிப்படையில் எனது காரை பெற்று வாடகையே தராமல் பின்பு அந்த காரை விற்று மோசடி செய்து விட்டார்.

Madurai court order on Ponnambalam cheating case

எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜெ.ஜெயக்குமரன் ஆஜராகி வாதாடினார்.

மனுவை விசாரித்த நீதிபதி, "மனுதாரரின் புகாரை சிவகாசி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் 8 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்," என்று உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+