அழகிரியை புறக்கணித்து மதுரையில் திமுக நிகழ்ச்சிகள்... ஆதரவாளர்கள் கொந்தளிப்பு!
மதுரை: திமுக தென்மண்டல செயலர் மு.க. அழகிரியை புறக்கணித்துவிட்டு மதுரையில் திமுக நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்து போயிருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் இருந்து அண்மையில் மு.க. அழகிரி தமிழகம் திரும்பினார். அவர் திரும்பிய நேரத்தில்தான் ஏற்காடு தேர்தல் பரபரத்துக் கொண்டிருக்கிறது.
பின்னர் அவர் மதுரையிலேயே முகாமிட்டிருக்கிறார். இருப்பினும் மதுரையில் திமுகவில் நடைபெறும் சம்பவங்களால் அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் கடும் கொந்தளிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

பொன்.முத்து விவகாரம்
ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தல் பொறுப்பாளராக மதுரையைச் சேர்ந்த பொன். முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டிருப்பது அழகிரிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் முதல் எரிச்சலாம்.. தம்மை சீண்டவே பொன்.முத்துவை ஸ்டாலின் நியமித்திருக்கிறார் என்கிறாராம் அழகிரி.

மகளிர் அணி பயிற்சி முகாம்
அதேபோல் அழகிரி மதுரையில் இருக்கும்போதே திமுக மகளிர் அணி பயிற்சி முகாம் நடந்துள்ளது. தென்மண்டலத்தைச் சேர்ந்த 170 பேர் இதில் கலந்து கொண்டனர். ஆனால் அழகிரியின் பெயரோ எந்த சுவரொட்டியிலும் இல்லை.

சுபவீ, அருள் மொழி
இந்த கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீயும் திக வழக்கறிஞர் அருள்மொழியும் கலந்து கொண்டு பேசியிருக்கின்றனர்.

கூரியரில் அழைப்பு
மதுரையில் இருந்த அழகிரிக்கு கூரியரில் அழைப்பு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இது இன்னமும் உச்சகட்ட கோபத்தை அழகிரி ஆதரவாளர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. உடனே ஆதரவாளர்கள் அழகிரியிடம் போய் குமுற கொஞ்சம் பொறுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.












Click it and Unblock the Notifications