தூத்துக்குடி: போலீஸ், தலைமை செயலாளர் மீது வழக்கு பதிவு?.. அரசு பதில் அளிக்க வேண்டும்: ஹைகோர்ட்
துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர்கள், தலைமை செயலர், உள்துறை செயலர், டிஜிபி மீது கொலை வழக்கு பதிய கோரிய வழக்கில் தமிழக அரசு நாளை மறுநாள் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித
மதுரை: தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர்கள், தலைமை செயலர், உள்துறை செயலர், டிஜிபி மீது கொலை வழக்கு பதிய கோரிய வழக்கில் தமிழக அரசு நாளை மறுநாள் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த கொடூரமான காப்பர் ஆலையான ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியாக போராடி வந்தனர். இதில் கடந்த வாரம் செவ்வாய் கிழமை நடந்த போராட்டத்தின் போது, மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.

இந்த மோசமான செயல் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர். இன்னும் 30 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காணாமல் போன பலர் இன்னும் வீடு வந்து சேரவில்லை.
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தலைமை செயலர், உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் மீது கொலை வழக்கு பதியக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதேபோல் நிவாரண தொகையும் அதிகப்படுத்த கோரி மனுவில் கூறப்பட்டது.
தற்போது துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர்கள், தலைமை செயலர், உள்துறை செயலர், டிஜிபி மீது கொலை வழக்கு பதிய கோரிய வழக்கில் தமிழக அரசு நாளை மறுநாள் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சம் வழங்குவது குறித்து தமிழக அரசு இரண்டு நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications