Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சசிகலா புஷ்பாவிடம் காலை முதல் மாலை வரை இடை விடாமல் விசாரணை.. மதுரையில்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவிடம் மதுரை போலீஸார் இன்று காலை தொடங்கி மாலை வரை இடைவிடாமல் தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் பிரதீப் ராஜா ஆகியோர் மீது சசிகலா புஷ்பா வீட்டில் வேலை பார்த்து வந்த இரு இளம் பெண்கள் பாலியல் கொடுமை புகார் கொடுத்துள்ளனர்.

அதில் சசிகலா புஷ்பா நிர்வாணமாக படுத்துக் கொண்டு மசாஜ் செய்யச் சொன்னதாகவும், அவரது கணவரும், மகனும் பாலியல் இச்சைக்கு ஆளாகுமாறு தங்களைக் கொடுமைப்படுத்தியதாகவும் கூறியிருந்தனர்.

Madurai police grills Sasikala Pushpa

இதுதொடர்பான வழக்கி் கைதாகாமல் இருக்க முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர் சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் ஆகியோர். அதில் சசிகலா புஷ்பாவுக்குப் பதில் வேறு யாரோ கையெழுத்திட்டதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை பதிவாளர் கே. புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராக சசிகலா புஷ்பா குடும்பத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அவரும் காலையில் தனது குடும்பத்தோடு ஆஜரானார். அவரிடம் மாலை வரை போலீஸார் விசாரணை நடத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+