ஃபீஸ் கட்ட முடியாட்டி மாடு மேய்ங்க... முறுக்கு விக்க போங்க... மதுரை தலைமை ஆசிரியரின் எகத்தாள பேச்சு
கல்வி கட்டணம் செலுத்த முடியாவிட்டால் மாடு மேய்க்க செல்லுங்கள் என்று தலைமை ஆசிரியர் தூற்றுவதாக மாணவர்கள் மதுரை ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
Recommended Video

மதுரை: கல்வி கட்டணம் செலுத்த முடியாவிட்டால் மாடு மேய்க்கவும் முறுக்கு விற்கவும் செல்லுங்கள் என்று தலைமை ஆசிரியர் கண்டபடி பேசுவதாக மதுரை மாணவர்கள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
மதுரை ஆட்சியரகத்தில் நேற்று குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் வீரராகவ ராவ் குறைகளை கேட்டறிந்தார். அப்போது உசிலம்பட்டியில் உள்ள எஸ்.டி.ஏ பள்ளி மாணவர்களும் சீருடையில் வந்தனர்.

அவர்களை விசாரித்த போது அவர்களும் குறை தீர்க்க மனு கொடுக்க வந்ததாக கூறப்பட்டது. அப்போது மாணவர்கள் கொடுத்த புகார் மனுவை ஆட்சியர் படித்து பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் உசிலம்பட்டியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறோம். மத்திய அரசின் இலவச கல்வி திட்டத்தின் கீழ் அந்த பள்ளியில் கடந்த 2011-ஆம் ஆண்டு சேர்ந்து அதே பள்ளியில் தொடர்ந்து படித்து வருகிறோம்.
எங்கள் பள்ளிக்கு புதிய முதல்வர் பொறுப்பேற்றுள்ளார். மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கான கல்வி கட்டணம் வரவில்லையாம். எனவே பள்ளிக்கு வரக் கூடாது என்று கூறிவிட்டார். எனினும் தொடர்ந்து பள்ளிக்கு சென்று வருகிறோம்.
கல்வி கட்டணம் வராததால் எங்களை வெயிலில் நிற்குமாறு கொடுமைப்படுத்துகிறார். மேலும் அவதூறு வார்த்தைகளை பேசுகிறார். பள்ளி கட்டணம் செலுத்த முடியாவிட்டால் மாடு மேய்க்க செல்லுங்கள். இங்கு வராதீர்கள் என்கிறார். அதுவும் முடியாவிட்டால் கடை கடையா ஏறி இறங்கி முறுக்கு விற்க சொல்கிறார்.
இதனால் நாங்கள் கட்டணத்தை செலுத்துவதாக கூறிவிட்டோம். ஆனால் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு அதிகம் கட்டணம் கேட்கிறார். எனவே அவர் மீிது நடவடிக்கை எடுங்கள் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications