தென்னகத்து கும்பமேளா "மகாமக பெருவிழா" - கும்பகோணத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது
கும்பகோணம்: 'தென்னகத்தின் கும்பமேளா' என்று பெருமையுடன் அழைக்கப்படும் மகாமக பெருவிழா இன்று கும்பகோணத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்று முதல் 10 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.
குரு சிம்மராசியில் இருக்கும் போது மகம் நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி வரும் நாள் மகாமகம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2004ம் அண்டு மகாமக விழா நடைபெற்றது. தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மகாமகம் விழா கொண்டாடப்படுகிறது. இது தென்னகத்தின் கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது.

கோவில்களில் கொடியேற்றம்
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், நாகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளகஸ்தீஸ்வரர் ஆகிய 6 சிவ ஆலயங்களில் கோவில்களில் பகல் 12மணிக்கு மேல், 1 மணிக்குள் கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகாமக நிகழ்வுகள் தொடங்கியுள்ளன.
20 நதிகளின் புண்ணிய தீர்த்தங்கள்
மகாமகம் விழாவை முன்னிட்டு நாட்டிலுள்ள புண்ணிய நதிகளான கங்கை, நர்மதா, கோதாவரி உள்ளிட்ட 20 புண்ணிய தீர்த்தங்களின் நீர் அடங்கிய கலசங்கள் கொண்டு வரப்பட்டு ஊர்வலமாக மகாமக குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
சிறப்பு பூஜைகள்
நான்கு கரைகளை சுற்றி வந்தபிறகு, வடக்கு கரைக்கு புனித தீர்த்தங்கள் அடங்கிய கலசங்கள் கொண்டு வரப்பட்டன. அங்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் முன்னிலையில், இலுப்பபட்டு கல்யாணசுந்தர சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் குழுவினர் குளத்தின் படிகளுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்தனர்.
மகாமக குளத்தில் தீர்த்தங்கள்
தொடர்ந்து மகாமக குளத்தைச் சுற்றியுள்ள 16 சோடச லிங்கங்களுக்கும் அலங்கார தீபம், கங்கா ஆரத்தி செய்தனர். இதையடுத்து, 20 புண்ணிய தீர்த்தங்களும் மகாமக குளத்தின் 20 புனித கிணறுகளில் உள்ள நீரில் சேர்க்கப்பட்டது.
புனித நீராடிய பக்தர்கள்
மகாமகம் திருவிழா தொடங்கியுள்ள நிலையில், இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாமகம் குளத்தில் புனித நீராடி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிப்ரவரி 22ல் தீர்த்தவாரி
பிப்ரவரி 22ம் தேதி மகாமகம் தினத்தன்று நடைபெறும் தீர்த்தவாரியில் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படுள்ளன. தீயணைப்பு படையினர், 108 ஆம்புலன்ஸ் சேவைகள் தயார் நிலையில் உள்ளன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications