திருவனந்தபுரத்தில் பரமாரிப்பு பணி... நெல்லை ரயில்களின் நேரம் மாற்றம்
நெல்லை: திருவனந்தபுரம் கோட்டத்தில் ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணிகள் நடப்பதால் மே 27ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை அப்பாதை வழியாகச் செல்லும் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் வேணுகோபால் கூறியிருப்பதாவது :-
திருவனந்தபுரம் கோட்டத்திற்கு உள்பட்ட திருவனந்தபுரம், நெம்மல் ரயில் நிலையங்கள் இடையே ரயில்வே மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக நெல்லை வரும் ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மே 24, 26, 30, ஜூன் 1ம் தேதிகளில் ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குருவாயூர் - சென்னை எழும்பூர் ரயில் எண் 16128 மே 24, 26 ஆகிய நாட்களில் நெல்லைக்கு 90 நிமிடம் தாமதமாக வந்து சேரும். இது போல் மே 30ம் தேதி, ஜூன் 1ம் தேதி 80 நிமிடங்கள் தாமதமாக நெல்லை ரயில் நிலையம் வந்து சேரும். தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இமைப்பு ரயில் எண் 16130 மே 24ம் தேதி, 26ம் தேதி, 30ம் தேதி ஜூன் 1ம் தேதி ஆகிய நாட்களில் 8.25 மணிக்கு தூத்துக்குடியில இருந்து புறப்பட்டு செல்லும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் - கோவை பயணிகள் ரயில் எண் 56319 மே 24ம் தேதி, 60 நிமிடங்களும், மே 26ம் தேதி, 30ம் தேதி, ஜூன் 1ம் தேதி ஆகிய நாட்களில் 20 நிமிடங்கள் தாமதமாக நெல்லை ரயில் நிலையம் வந்து சேரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.