தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: மின் உற்பத்தி பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் மின்சார வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், 5 மின் உற்பத்தி இயந்திரங்கள் இயங்கி வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, 4வது மின் உற்பத்தி இயந்திரத்தில் முழு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் மீண்டும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 4வது மின்சார உற்பத்தி இயந்திரம் நிறுத்தப்பட்டு உள்ளது. இன்று முதல் தொடங்கி 3 நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி பாதிப்பால், மின்சார வினியோகத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications