பன்னீர்செல்வத்திற்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது: மைத்ரேயன் அதிரடி
அதிமுகவில் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் பன்னீர்செல்வத்திற்குதான் ஆதரவு அளிக்கிறார்கள். இவ்வாறு மைத்ரேயன் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக உள்ளதாக ராஜ்யசபா எம்.பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா ஏற்கனவே பன்னீர்செல்வத்தை இருமுறை முதல்வராக நியமித்துள்ளார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர் பன்னீர்செல்வம் மட்டும்தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்குதான் அனைவரும் ஆதரவு அளிப்பார்கள். அதிமுகவில் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் பன்னீர்செல்வத்திற்குதான் ஆதரவு அளிக்கிறார்கள். இவ்வாறு மைத்ரேயன் தெரிவித்தார்.

பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்த பிறகு மைத்ரேயன் இவ்வாறு நிருபர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications