சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: சாத்தூர் அருகே சிவசங்குபட்டியில் பட்டாசு ஆலை ஒன்றில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
சாத்தூரை அடுத்த சிவசங்குபட்டியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிமருந்துகள் உராய்ந்ததால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

இதில் 70க்கும் மேற்பட்ட அறைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கரமாக வெடித்து சிதறின. இதனால் அப்பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. 4 தீயணைப்பு வண்டிகள் தீயை கடுமையாக போராடி அணைத்தன.
இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலையின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன.. இந்த இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.












Click it and Unblock the Notifications