பொய்ப் பித்தலாட்டத்தின் மொத்த உருவம் அதிமுக அரசு.. மக்கள் அதிகாரம் அமைப்பு
சென்னை: டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் மக்களை ஏமாற்றி, பொய் பித்தலாட்டம் செய்து வருகிறது என்று மக்கள் அதிகாரம் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா அரசுக்கு பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணமோ, அதற்கான விருப்பமோ கிடையாது. ஏனென்றால் கோடிக்கணக்கான ரூபாய் மது விற்பனையின் மூலம் வருவதை விடக் கூடாது. மேலும், மேலும் அதிகப்படியான நபர்களை குடிக்க வைப்பதன் மூலம், குடிகாரர்களாக மாற்றுவதன் மூலம் மக்களுக்கான எண்ணற்ற பிரச்சனைகளுக்காக போராடாமல் போலீசை வைத்து அடக்கி ஒடுக்கிவிடலாம். கோழைகளாக மாற்றிவிடலாம் என்று ஜெயலலிதா அரசு நம்புகிறது.

ஜெயலலிதா அரசாங்கம் பொய் பித்தலாட்டத்தின் மொத்த உருவம். ஒரு மக்கள் நல அரசு சட்டப்படியாக நடந்து கொள்வது. மக்களுக்கு உண்மையாக நேர்மையாக நடந்து கொள்வது என்பதை துளியும் அங்கு (அதிமுக அரசு) எதிர்பார்க்க முடியாது. பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போடுவதும், ஆனால் பரோல் கேட்டால் கொடுக்க முடியாது என்று மறுப்பதும் இரண்டை நிலைப்பாடு.
முந்தைய தேர்தலில் நான் வெற்றி பெற்றால் ஈழம் வாங்கித் தருவேன் என்றார். இப்போது பூரண மதுவிலக்கு என்று சொல்லியிருக்கிறார். மது விலக்கு என்றால் பீகார் மாநிலத்தில் உள்ளதைப் போல தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications